Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅடுத்த கட்டத்திற்கு நகர்ந்த மாணவி சத்தியா வழக்கு: 4 பேரிடம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலமா?

    அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த மாணவி சத்தியா வழக்கு: 4 பேரிடம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலமா?

    மாணவி சத்தியா மரணத்தை நேரில் பார்த்த சக மாணவிகள் 4 பேரிடம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

    சென்னை கிண்டிக்கு அருகில் உள்ள பகுதிதான் ஆதம்பாக்கம். இப்பகுதியைச் சேர்ந்த சதீஷிற்கு வயது 23. இவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயதான சத்தியா என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார். 

    இருவரும் வழக்கம்போல் ஆதம்பாக்கம் அருகிலுள்ள பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருவருக்குமிடையில் ஏதோ தகராறு ஏற்பட்டு அதனால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது. 

    இதையடுத்து, அப்போது அந்த வழியாக வந்த ரயில் முன் மாணவி சத்தியாவை, சதீஷ் தள்ளவிட்டார். ரயிலில் சிக்கிய சத்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீவிர தேடுதலுக்குப் பின் தலைமறைவான சதிஷ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இதன்பிறகு, மாணவி கொலை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. 

    இந்நிலையில், மாணவி சத்தியா மரணம் தொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்த சக மாணவிகள் 4 பேரிடம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  

    மேலும், நாளை மறைந்த சத்யாவின் தாயார் மற்றும் உறவினர்களிடம் சிபிசிஐடி துறையினர் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால் இந்த வழக்குகள் அடுத்தக்கட்டம் செல்லும் என தெரிகிறது. 

    இதையும் படிங்க: தனியுரிமை மீதான தாக்குதல் இது..! ஹோட்டல் அறையின் வீடியோ லீக்கால் கடுப்பான விராட் கோலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....