Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா"நிச்சயம் அவள் செய்திருக்க மாட்டாள்"சாகும் தருவாயிலும் காதலிக்காக பேசிய காதலன்: திட்டமிட்டு கொலை செய்தது எப்படி?

    “நிச்சயம் அவள் செய்திருக்க மாட்டாள்”சாகும் தருவாயிலும் காதலிக்காக பேசிய காதலன்: திட்டமிட்டு கொலை செய்தது எப்படி?

    இளைஞர் ஒருவர் தான் உயிரிழக்கும் நிலையிலும் தனது காதலி கலந்துகொடுத்த மருந்து குறித்து யாரிடமும் கூறவே இல்லை. 

    கேரள மாநிலம் பாறசாலைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஷரோன் கடந்த அக்டோபர் 14-ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனது காதலி வீட்டுக்கு நண்பருடன் சென்றுள்ளார். அங்கு ஷரோன் ராஜ் தனது காதலியான கிரீஷ்மாவை சந்தித்துள்ளார். அப்போது, கிரீஷ்மா, ஷரோனுக்கு கசாயம் என்று கூறி ஒரு மருந்து கொடுத்துள்ளார். அதைக் குடித்த ஷரோன், தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து 11 நாள்களில் மரணமடைந்தார்.

    இதைத்தொடர்ந்து, ஷரோன் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். மேலும், மகன் காதலித்து வந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. என் மகனுடன் பேசுவதை அவளது பெற்றோர் ஏற்கவில்லை. இந்த நிலையில், அந்தப் பெண் என் மகனை அழைத்து, தனது விருப்பத்துக்கு மாறாகத் திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகக் கூறியுள்ளார். பிறகுதான் வீட்டுக்கு அழைத்து அவர் கசாயம் என்ற பெயரில் ஆசிட் கலந்து கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகக் கூறியிருந்தனர்.

    இந்நிலையில், ஷரோனுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர் ஆசிட் போன்ற திரவத்தைக் குடித்ததால், அவரது உடல் உறுப்புகள் சேதமடைந்து பலியானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்நிலையத்துக்கும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்தது. இதனிடையே, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குன்னத்துக்கல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தினர். 

    இதையும் படிங்க: தனியுரிமை மீதான தாக்குதல் இது..! ஹோட்டல் அறையின் வீடியோ லீக்கால் கடுப்பான விராட் கோலி

    காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஷரோனிடமிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக, ஆயுர்வேத மருந்து என்று சொல்லி பூச்சி மருந்தைக் கலந்து குடிக்கக் கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

    கிரீஷ்மாவும், ஷரோனும் கடந்த ஓராண்டுக்கும் மேல் காதலித்து வருவதாகவும், ஆனால், ராணுவத்தில் பணியாற்றும் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதால், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

    மேலும், தனது ஜாதகப்படி, தான் முதலில் திருமணம் செய்து கொள்ளும் நபர் இறந்துவிடுவார் என்றும், அதனால் முதலில் ராணுவ வீரரைத் திருமணம் செய்து கொண்டு அவர் இறந்ததும் ஷரோனை திருமணம் செய்துகொள்வதாக கிரீஷ்மா கூறியுள்ளார். ஆனால், இதற்கு ஷரோன் ஒப்புக் கொள்ளவில்லை. இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ராணுவ வீரரிடம் காட்டி திருமணத்தை நிறுத்துவேன் என்றும் ஷரோன் மிரட்டியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, ஷரோனைக் கொலை செய்வது என்று கிரீஷ்மா முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டுக்கு வரவழைத்து, ஆயுர்வேத மருந்து என்று கூறி பூச்சிக்கொல்லி மருந்தை குளிர்பானத்துடன் கலந்து கொடுத்துள்ளார். 

    ஷரோன் தான் உயிரிழக்கும் நிலையிலும் கிரீஷ்மா கலந்துகொடுத்த மருந்து குறித்து யாரிடமும் கூறவே இல்லை. மேலும், காவல்துறையிடம் கடைசி நேரத்தில் கிரீஷ்மா தனக்கு விஷம் கலந்து கொடுத்திருக்க வாய்ப்பில்லை என்றே ஷரோன் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. 

    இதையும் படிங்க: கோமாளி அரசியல்வாதி அண்ணாமலை: கடுமையாக விமர்ச்சித்த திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....