Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்போலி பில் போடும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை: கூட்டுறவுத்துறை எச்சரிக்கை

    போலி பில் போடும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை: கூட்டுறவுத்துறை எச்சரிக்கை

    நியாயவிலைக் கடைகளில், பொருட்கள் வாங்காமல் வாங்கியதாக குறுஞ்செய்தி பெறப்படுவதாகப் தொடர் புகார்கள் வருவதை அடுத்து போலி பில் போடும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் PO கருவிகள் நிறுவப்பெற்று Biometric முறை மூலம் கட்டுப்பாட்டுப் பொருட்களும் சிறப்புப் பொது விநியோகத் திட்ட பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாத பொருட்கள் வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி வருவதாக TN மக்கள் Portal எனும் இணையதளத்தில் புகார்கள் வரப்பெறுகின்றன.

    எனவே, வழங்கப்படாத பொருட்களுக்கு வழங்கப்பட்டதாக குறுந்தகவல் பெறப்பட்டதாக புகார்கள் வரப்பெற்றால் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    புகார்களில் குறிப்பிட்ட முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், முறைகேடுகளை கண்காணிக்க தவறும் சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

     

    மாற்றுத்திறனாளிகள் துறைக்கு தனி கவனம், அரசு வேலைகளில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....