இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராணுவ ஜெட் விமானத்தில் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், இலங்கை மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
போராட்டங்களின் விளைவாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து ஆளும் கட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் நீடித்தது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார்.
இதனையடுத்து, நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் தனது பதவியை ராஜிநாமா செய்யவிருப்பதாக அறிவித்தனர்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று தனது பதவியை ராஜிநாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இலங்கையில் இருந்து தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் ராணுவ விமானத்தின் மூலம் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு தப்பிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தீர்ப்பு எனக்கு மிகவும் ஏமாற்றமாய் உள்ளது- விஜய் மல்லையா