Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைதவிக்கும் இலங்கையை மீட்பாரா புதிய அதிபர்?

    தவிக்கும் இலங்கையை மீட்பாரா புதிய அதிபர்?

    இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வெற்றிப்பெற்றார்.

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், ஜூலை 9-ம் தேதி இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார்.

    இதையடுத்து இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சே கடந்த 15-ம் தேதி தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்தார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் இடைக்கால அதிபராக ஜூலை 15-ம் தேதி அன்றே பதவியேற்றார்.

    அதன்பின்னர், கடந்த 16-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடியது. இக்கூட்டமானது இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோத்தபய ராஜபக்சேவின் ராஜிநாமா கடிதம் வாசிக்கப்பட்டது. 

    மேலும், இலங்கை அதிபர் தேர்தல் ஜூலை 20-ம் தேதி நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக அறிவித்தார். அதன்பின்னர், அன்றைய கூட்டம் கலைக்கப்பட்டது.

    இந்நிலையில், இலங்கையில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, அந்நநாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த 20-ம் தேதி காலை நடைபெற்றது. இந்த தேர்தலை அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் புறக்கணித்தனர். 

    இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் மொத்தம் 223 வாக்குகள் பதிவானது. பதிவான மொத்த வாக்குகளில் நான்கு வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 

    இதன்பின்னர், இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. அதன்படி, இலங்கையின் இடைக்கால அதிபராக பதவிவகிக்கும் ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மற்றொரு அதிபர் வேட்பாளர் டலஸ் அழகம்பெரும 82 வாக்குகள் பெற்றார். 

    கோத்தபய ராஜபக்சேவின் பதவிக்காலமான நவம்பர் 2024 வரை ரணில் விக்ரமசிங்கே செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இருமுறை ரணில் விக்கிரமசிங்கே அதிபர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். ஆனால், அந்த இருமுறையும் ரணில் விக்கிரமசிங்கே தோல்வியை தழுவினார்.

    இந்நிலையில், தற்போது ஆறு முறை இலங்கை பிரதமாரக இருந்த ரணில் விக்ரமசிங்கே இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 20-ம் தேதி ரணில் விக்ரமசிங்கே இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, ஜூலை 21-ம் தேதியாகிய இன்று இலங்கையின் தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூரிய முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்கே, புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....