பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளும் முழுமையாக திறக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்ட வருகின்றன.
இந்நிலையில், மாணவர்களின் கல்வித் திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக் கூடாது என சமீபத்தில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனிடையே, தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், பொது தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்தும் வகையில் இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: மன்னிப்பு கேட்டும் கோபப்பட்ட ஆசிரியை.. முத்தம் கொடுத்து சமாதானம் செய்த மாணவன் – வைரல் வீடியோ