‘எங்களை மன்னித்துவிடுங்கள்’ என எழுதி வைத்து சென்ற கொள்ளையர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் நகைக்கடை ஒன்றில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன்படி கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மீரட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளை அடிப்பதற்காக 15 அடிக்கு ஒரு சுரங்கப்பாதையை கொள்ளையர்கள் இருவர் தோண்டினர்.
சுரங்கப்பாதை வழியே இவர்கள் லாக்கரை திறக்க முடியாமல் போனது. இதன் காரணமாக, ‘எங்களை மன்னித்து விடுங்கள்’ என குறிப்பிட்டு சுன்னு, மன்னு என தங்களது பெயர்களையும் எழுதி வைத்து அந்தக் கொள்ளையர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
மறுநாள் வழக்கம்போல் நகைக்கடையை திறந்த உரிமையாளர் தீபக் குமார் கொள்ளை முயற்சி நடந்ததைக் கண்டு அதிர்ந்து போனார். உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததும், அவர்கள் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நகைக்கடையில் கொள்ளையடிக்க கேஸ் கட்டருடன் வந்தும், லாக்கரை திறக்க முடியாமல் போனதால் கொள்ளையர்கள் திரும்பிச் சென்றதாகவும், இதுமட்டும் இன்றி, கடையில் இருந்த கிருஷ்ணர் சிலை அவர்களை பார்த்தது போல் இருந்ததால், அதனை திருப்பி வைத்துவிட்டு லாக்கரை திறக்க முற்பட்டு தோல்வி அடைந்ததாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் அவர்கள் செய்தது பதிவாகி இருக்கும் எனபதால் சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க்கை மட்டும் கொள்ளையர்கள் தனியாக எடுத்து சென்றிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உலக அளவில் பிரபலமானவர்கள்; முதலிடம் பிடித்த மோடி!