டெல்லியில், தீப்பொறிகளை பறக்கவிட்டு பொதுமக்களுக்கும், சக வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24-ம் தேதி இந்தியா முழுவதும் கோலகலமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பட்டாசுகள், பலகாரங்கள், திரைப்படங்கள் என பலவிதமாக தீபாவளியை கொண்டாடினர்.
#AhmedabadPolice pic.twitter.com/ddwZCFd9Gf
— Ahmedabad Police 👮♀️અમદાવાદ પોલીસ (@AhmedabadPolice) October 27, 2022
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் இளைஞர்கள் தீபாவளி கொண்டாடிய விதம் வைரலாகியுள்ளது. அகமதாபாத் பகுதியில், இளைஞர்கள் சிலர் ஸ்கார்ப்பியோ காரின் முற்பகுதியில் அமர்ந்து, காரின் மேற்பகுதியில் வான வெடிகளை வைத்து வேடிக்கை காட்டினர். இது குறித்த வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலானது.
ஆனால், இந்த வைரல் வீடியோவே இளைஞர்களுக்கு பின்னாளில் பிரச்சினையாகிவிட்டது. ஆம், இந்த வீடியோவைக் கொண்டு 8 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களை நடுரோட்டில் தோப்புக்கரணம் போட வைத்தனர்.
இந்நிலையில், இதேபோன்ற மற்றொரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. குருகிராம் நகரில் பின்புறம் பட்டாசுகளை வெடித்து, தீப்பொறிகளை பறக்கவிட்டு பொதுமக்களுக்கும், சக வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருமணமான ஒரே வருடத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்; புதுமண தம்பதிகளுக்கு சீன அரசு கொடுக்கும் நெருக்கடி