Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நின்றதா சிவகாரத்திகேயனின் 'மாவீரன்' படப்படிப்பு? - வெளிவந்த தகவல்

    நின்றதா சிவகாரத்திகேயனின் ‘மாவீரன்’ படப்படிப்பு? – வெளிவந்த தகவல்

    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் மாவீரன் திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ‘மண்டேலா’ திரைப்படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற மடோன் அஸ்வின் இயக்குகிறார். 

    மாவீரன் திரைப்படத்தில் பிரபல இயக்குநர் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். இதில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். ஏறத்தாழ, 40 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில், மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நின்றுவிட்டதாக செய்திகள் வந்தன. 

    சிவகார்த்திகேயன் சில காட்சிகளை வைக்க வேண்டுமென கூறியதாகவும், இயக்குநர் மடோன் அஸ்வின் மாட்டேன் என்று கூறியதால் இருவருக்குமிடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், உண்மையில் மழைக் காரணமாகவே படப்படிப்பு நிறுத்தப்பட்டதாகவும் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், மாவீரன் திரைப்படம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளது. சிவகாரத்திகேயன் நடிப்பில் இறுதியாய் வெளிவந்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால், ‘மாவீரன்’ சிறந்த படமாக உருவாகவேண்டுமென படக்குழு உழைத்து வருகிறது. 

    இதையும் படிங்க: நடிகர் விஜய் குரலில் வெளிவந்த ‘ரஞ்சிதமே’ பாடல்…இனி ஆட்டம்தான்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....