செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து ஒன்று வைரலாகி வருகிறது.
திரையுலகில் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கிய செல்வராகவன் தற்போது இயக்கம் மட்டுமல்லாமல், திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.
சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்த செல்வராகவன், தான் இயக்கிய நானே வருவேன் திரைப்படத்திலும் நடித்தார். இதைத்தொடர்ந்து, செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள பகாசூரன் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர், ‘எத்தனையோ நாள் நாம் நிம்மதியாய் இருந்திருக்கிறோம். கடவுளின் அருள். ஆனால் அதை பெரிதாய் பொருட்படுத்துவதில்லை. என்றோ ஒரு நாள் பிரச்சனை என்றால் “ ஐயோ அம்மா கடவுளே காப்பாத்து“ தான்.’ என்று தெரிவித்துள்ளார்.
எத்தனையோ நாள் நாம் நிம்மதியாய் இருந்திருக்கிறோம். கடவுளின் அருள். ஆனால் அதை பெரிதாய் பொருட்படுத்துவதில்லை. என்றோ ஒரு நாள் பிரச்சனை என்றால் “ ஐயோ அம்மா கடவுளே காப்பாத்து“ தான் .
— selvaraghavan (@selvaraghavan) December 8, 2022
இந்த பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.