தீவிரவாத தடுப்பு உறுதி செய்யும் வகையில் புதுச்சேரியில் “SEA Vigil” என்ற பாதுகாப்பு ஒத்திகையில் தீவிரவாதிகள் வேடமணிந்து வந்த 9 பேரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
இந்திய கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரியில் SEA VIGIL என்ற பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கியது. இந்நிலையில் தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் புதுச்சேரி கடற் பகுதி மற்றும் நகரப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கடலோர காவல்படையினர் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் சந்தேகப்படும்படியான புதிய நபர்கள் வந்தால் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தினர்.
இதனிடையே கடலோரப் பகுதிகளில் சோதனை மேற்கொண்ட போது, கோட்டகுப்பம் அருகே 9 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து தேங்காய் திட்டு துறைமுக பகுதியில் உள்ள கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் நால்வரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது: இயக்குனர் கெளதமன்