நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரி பேருந்து மோதி 5-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கார்கூடல்பட்டி அடுத்து உள்ள செம்மண்காடு பகுதியில், பள்ளி பேருந்துக்காக நிழல் கூடத்தில் காத்திருந்த 5-ம் வகுப்பு மாணவன் பிரபாகரன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆயில்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி பேருந்துக்காக காத்திருந்த சிறுவன் கல்லூரி பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற கவனக் குறைவு காரணமாக பள்ளி மாணவர்கள் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தொடங்கப் போகிறது பொறியியல் கலந்தாய்வு; குறைகிறதா கல்லூரிகளின் எண்ணிக்கை?