டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி ஒரே நாளில் ரூபாய் 273 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 15) 76-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும், சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றினார்.
இதனிடையே, சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று (ஆகஸ்ட் 15) விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக அதற்கு முந்தய நாளான ஆகஸ்ட் 14-ம் தேதி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்துள்ளது.
இதன்படி, டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி ஒரே நாளில் ரூபாய் 273 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.58.26 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ரூ.55.77 கோடியும், சேலத்தில் ரூ.54.12 கோடியும், திருச்சியில் ரூ.53.48 கோடியும் கோவையில் ரூ.52.29 கோடியும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடரை இனி வாங்க முடியாதா?