நடிகை சமந்தா மயோசைட்டிஸ் சிகிச்சைக்காக தென்கொரியா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகளாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.
மிகவும் பிஸியாக காணப்பட்ட சமந்தா சமீபத்தில், தான் மயோசைட்டிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மருத்துவ உதவியால் இப்போது தேறி வருகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், சமீபத்தில் வெளிவந்த யசோதா திரைப்படத்தின் புரோமஷன் பணிகளில் அவர் கலந்துக்கொண்டார். இருப்பினும், நோயின் பாதிப்பு தொடர்ந்து இருப்பதால், அவர் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில், சமந்தா மயோசைட்டிஸ் சிகிச்சைக்காக தென்கொரியா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், சிகிச்சை முடியும்வரை அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்திருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் பரவிவருவதையடுத்து, ரசிகர்கள் சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என தங்களது சமூகவலைதள பக்கங்களின் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்ட புகைப்படம்; விவரங்களை தேடும் நெட்டிசன்கள்