கர்நாடகாவில் லிவ்-இன் முறையில் பல காலம் சேர்ந்து வாழ்ந்து வந்த காதலியை காதலன் கொடூரமாக கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஹொரமாவு என்ற பகுதியில் சந்தோஷ் தமி என்ற நபருடன் கிருஷ்ண குமாரி என்று பெண் லிவ்-இன் முறையில் பல காலமாக வாழ்ந்து வந்தார்.
கிருஷ்ண குமாரி நேபாள நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் அவர் அழகு கலை நிபுணராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கிருஷ்ண குமாரி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த கொலை சம்பவமாக தொடர்பாக, பெங்களூரு நகரின் கிழக்கு பகுதி துணை காவல் ஆணையர் பீமாசங்கர் எஸ்.குலெட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பெங்களூரு நகரின் ஹொரமாவு பகுதியில் லிவ்-இன் முறையில் ஜோடியாக வாழ்ந்த சந்தோஷ் தமிக்கும், கிருஷ்ண குமாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதில், கிருஷ்ண குமாரியின் தலையை தமி, சுவரின் மீதி மோதியுள்ளார். இதில் அந்தப் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பெண் உயிரிழந்தார்” என தெரிவித்தார்.
இதையடுத்து காவல்துறையினர் தமியை இன்று கைது செய்தனர்.
மின்சார ரயிலில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி