இந்தியாவில் ரஷ்யாவின் கலாஷ்நிகோவ் ஏகே-203 துப்பாக்கிகள் தயாரிப்பு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் அமேதியில் இந்தோ-ரஷ்யா துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ரஷ்யாவின் கலாஷ்நிகோவ் ஏகே-203 துப்பாக்கிகளைத் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படியே தற்போது துப்பாக்கி தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது, இப்பணியின் வெளிப்பாடாக கலாஷ்நிகோவ் ஏகே-203
துப்பாக்கிகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இவை இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக ரஷ்ய அரசின் ராஸ்டெக் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கலாஷ்நிகோவ் ஏகே-203 துப்பாக்கிகள் தயாரிப்பை தொடங்கியதன் மூலம், இந்திய பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளில் பயன்படுத்துவதற்கு வசதியான, உயர்தர, நவீன சிறிய ரக ஆயுதங்கள் உருவாகும். மேலும், இந்த துப்பாக்கி உலகின் சிறந்த தாக்குதல் துப்பாக்கிகளில் ஒன்றாகும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவடைந்த பாலமேடு ஜல்லிக்கட்டு; காரை பரிசாக பெற்ற வீரர்