Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்வேலை போயும் அடித்த 'ஜாக்பாட்'! எலான் மஸ்க்கால் தூக்கப்பட்ட இந்தியருக்கு இவ்வளவு இழப்பீடா?

    வேலை போயும் அடித்த ‘ஜாக்பாட்’! எலான் மஸ்க்கால் தூக்கப்பட்ட இந்தியருக்கு இவ்வளவு இழப்பீடா?

    ட்விட்டர் பணியில் இருந்து நீக்கப்பட்ட இந்தியருக்கு ரூ.346 கோடி கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கடந்த மே மாதம் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ..3.30 லட்சம் கோடி) வாங்குவதற்காக ட்விட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார்.

    அதன்பின்னர், போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம் (Spam) குறித்த முழுமையான கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். அதுவரையில் ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படடுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இதன் பின்பு, ட்விட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்து எந்த விவரங்களையும் தராததால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் கடந்த ஜூலை 10-ம் தேதி அறிவித்தார். 

    இதைத் தொடர்ந்து, எலான் மஸ்க் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. மேலும், ஒப்பந்தத்தின்படி அவர் நிறுவனத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று ட்விட்டரின் வாரியத் தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: திருப்பதியில் நவம்பர் 1 முதல் மீண்டும் இலவச தரிசன டோக்கன்! தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

    இதன்பின்னர், ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிவிட்டார் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதற்கேற்றார் போல், எலான் மஸ்க்கும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் Bio-வில் Chief Twit என்று மாற்றம் செய்துள்ளார். Place என்ற இடத்தில் Twitter HQ எனப் பதிவிட்டு தலைமையகத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

    மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவும், இந்தியருமான பராக் அக்ரவால், தலைமை நிதித்துறை அதிகாரி நேத் சேகல், சட்டம் மற்றும் திட்டத்துறை தலைமை அதிகாரி விஜயா கட்டே மற்றும் முக்கிய உயர் அதிகாரிகளை பணியில் இருந்தே நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியது.

    இதில் இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால், கடந்த 2011-ம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். படிப்படியாக உயர்ந்து, கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்புக்கு பராக் வந்தார். இந்நிலையில், தற்போது இவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், இவருக்கு சுமார் ரூ.346 கோடி கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    ட்விட்டர் கட்டுப்பாட்டின்படி, மாற்றப்பட்ட 12 மாதத்திற்குள் பராக் அகர்வால் பணியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு இந்த தொகை கிடைக்கும் என்று நிறுவனம் கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: கொடநாடு கொலை வழக்கில் அடுத்த கட்டம் ? நேபாளம் விரைகிறார்கள் சிபிசிஐடி போலீசார்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....