Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகுரூப் 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகள் வெளியீடு! தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்

    குரூப் 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகள் வெளியீடு! தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்

    இந்த மாதம் நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகளை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

    துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட குரூப் 1 பிரிவில் அடங்கியுள்ள 92 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்றது. 

    இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பட்டதாரிகள் விண்ணப்பம் செய்து இருந்தனர். இந்த நிலையில், இதில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 957 பேர் மட்டுமே குரூப் 1 தேர்வினை எழுதினர். இந்தத் தேர்வினை 1 லட்சத்து 31 ஆயிரத்து 457 பேர் எழுதவில்லை. 

    இந்த முறை குரூப் 1 தேர்வில் 200 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. மேலும் 140 பக்கங்கள் இருந்தது தேர்வு எழுதுபவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஒவ்வொரு கேள்விகளும் பெரிதாக இருந்ததால் பதில் அளிக்க நேரம் எடுத்தாக தேர்வர்கள் தெரிவித்து இருந்தனர். 

    இந்நிலையில் குரூப்  தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகளை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. இதனிடையே 4 கேள்விகளுக்கு விடைகள் தவறாக தரப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

    அரியலூரில் ரூ.83.82 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....