மெட்ரிக் பள்ளிகளுக்கு வரும் 9 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மெட்ரிக் பள்ளிகளுக்கும் வருகிற 9 ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்ட்டுள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தசரா பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.
அதேபோல், நாளை பள்ளிகளை திறப்பதா அல்லது விடுமுறையை தொடர்வதா என்ற கேள்வி குழப்பம் நிலவி வந்த நிலையில், இன்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி காலாண்டுத் தேர்வு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, அக்டோபர் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சட்டவிரோத சுவர் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் – கடிதம் எழுதிய அன்புமணி