Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்புஷ்பா ரசிகர்களுக்கு மாபெரும் இன்பச்செய்தி!

    புஷ்பா ரசிகர்களுக்கு மாபெரும் இன்பச்செய்தி!

    அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிப் பெற்ற புஷ்பா திரைப்படத்தின் அடுத்த பாகம் தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    கடந்த வருடத்தின் இறுதியில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம்தான், புஷ்பா. இத்திரைப்படம் தெலுங்கில் உருவானாலும் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது. 

    புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜூன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு தெலுங்கு உலகின் ராக்ஸ்டார் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சுகுமார் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

    அல்லு அர்ஜூன் மற்றும் படக்குழு செய்த விளம்பரத்தால், புஷ்பா திரைப்படத்தின் மீது இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு எழுந்தது. அதனைத் தொடர்ந்து புஷ்பா திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் பிரபலமாகின. பட்டித்தொட்டியெங்கும் புஷ்பா திரைப்படத்தைக் கொண்டு சேர்த்த பெருமை முதலில் இத்திரைப்படத்தின் பாடலுக்குத்தான் சேரும். 

    ‘ஓ சொல்றியா மாமா’ மற்றும் ‘ஶ்ரீ வள்ளி’ பாடல்கள் பலரையும் புஷ்பா திரைப்படத்தைப் பற்றி பேச செய்தது. ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் வெளியான சமயத்தில் ஏற்பட்ட அப்பாடல் குறித்த சர்ச்சைகள் புஷ்பா திரைப்படத்துக்கு மிகச்சிறந்த புரோமஷனாகவே அமைந்தது. 

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி வெளியான புஷ்பா திரைப்படமானது, வசூலில் பல சாதனைகளைப் படைத்தது. இந்தியா முழுவதும் பலரையும் கவர்ந்த இத்திரைப்படமானது 365 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. 

    புஷ்பா திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று முன்பே கூறப்பட்டது. அதன்படியே, புஷ்பா திரைப்படத்தின் முதல்பாகம் ‘புஷ்பா- தி ரைஸ்’ என்ற பெயரில் வெளிவந்தது. புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது ‘புஷ்பா- தி ரூல்’ என்ற பெயரில் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த நாள்தொட்டு இன்றுவரை ‘புஷ்பா- தி ரூல்’ எப்போது திரைக்கு வரும் என்று பலரும் கேள்வி எழுப்பினர். தற்போது, அக்கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. ஆம், ‘புஷ்பா- தி ரூல்’ திரைப்படத்தில் நடிப்பதற்காக துணை நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணியானது தொடங்கியுள்ளது. ஆதலால், புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்படிப்பு விரைவில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    கொலை நிகழ்த்தியவனின் புத்திசாலித்தனம் கதை முழுக்க நம்மை வியக்க வைக்கிறது – சல்யூட் திரைப்பார்வை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....