Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மதுபான கடைகளை மூட கோரி போராட்டம்!

    பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மதுபான கடைகளை மூட கோரி போராட்டம்!

    புதுச்சேரி உழவர்கரை பேருந்து நிறுத்தம் அருகில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான கடையை மூட கோரி உழவர்கரை மதுபானக்கடை எதிர்ப்பு போராட்ட குழு சார்பில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் மதுபான கடை அருகே நடத்திய ஆர்ப்பட்டத்தில் தொகுதி பாஜக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு.

    புதுச்சேரியில் ஆளும் அரசானது ஏராளமான மதுபானக்கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இதே போல் புதுச்சேரி மாநிலம் உழவர்கரை பகுதியில் தேவாலயங்கள், கோவில்கள், பள்ளிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மதுபான கடையை திறக்க அனுமதி கொடுத்து மதுபான கடையும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மதுபான கடையை உடனடியாக மூட வேண்டும் எனக் கோரி உழவர்கரை மதுபான கடை எதிர்ப்பு போராட்டம் குழு ஒன்றை உருவாக்கி மது கடை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு மதுக்கடையை மூட வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். பொதுமக்களுக்கு ஆதரவாக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பாஜக ஆதரவு சுயேட்ச்சை தொகுதி எம்எல்ஏ சிவசங்கரன் போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

    மேலும் பொதுமக்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி, திமுக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ சிவசங்கரன், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மதுக்கடைகளை திறக்க கூடாது என முதலமைச்சரிடம் மனு கொடுத்து இருந்தும் அதையும் மீறி மதுக்கடைக்கு அனுமதி கொடுக்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களுக்கு தொகுதி எம்எல்ஏ என்ற முறையிலும் ஆதரவு கொடுத்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவித்த அவர், உடனடியாக முதலமைச்சரும் அரசும் இந்த மது கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால் இப்பகுதி பொதுமக்களே மதுக்கடையை அடித்து உடைத்து மூடும் சூழ்நிலை ஏற்படும் என்றும், இப்பகுதி மக்களுக்கு ஆதரவாகவும் நான் எப்போதும் உறுதுணையாக இருந்து மதுக்கடையை அகற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    நானும் அவரும் ஒரே சமயத்தில் தான் முதலமைச்சர்கள் ஆனோம்; நினைவுகளை பகிர்ந்த ரங்கசாமி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....