புரோ கபடி போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.
புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசன் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், புரோ கபடி போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் பெங்களூர் புல்ஸ் மற்றும் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளும், தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளும் மோதின.
இந்த ஆட்டங்களில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 45-25 என்ற புள்ளி கணக்கில் பெங்களூர் புல்ஸ் அணியை வீழ்த்தியது. இதில் பெங்களூர் அணி சார்பில் ரெய்டு சென்ற பரத் 10 புள்ளிகளை பெற, ஜெய்பூர் அணி வீரர் அர்ஜூன் தேஷ்வால் 13 புள்ளிகளை பெற்றார்.
தமிழ் தலைவாஸ் மற்றும் டெல்லி தபாங் மோதிய மற்றொரு ஆட்டமானது 37-37 என்ற புள்ளி கணக்கில் டை ஆனது. தமிழ் தலைவாஸ் அணி சார்பில் களமிறங்கிய, நரேந்தர் தான் சென்ற ரெய்டுகளின் மூலம் 18 புள்ளிகளை பெற்றார். அதேபோல, டெல்லி அணியின் ரெய்டர் நவீன்குமார் 15 புள்ளிகளை பெற்றார்.
மேலும், நாளை இரவு 7.30 மணியளவில் நடைபெறவுள்ள புரோ கபடி போட்டியில் மூன்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
அவையாவன;
- உத்தரபிரதேச யோதாஸ் மற்றும் யு மும்பா
- பாட்னா பைரேட்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ்
- ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ்
பொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் வேலை; இளைஞர்களே முந்துங்கள்..