புரோ கபடி போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றிப்பெற்றது.
புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசன் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், புரோ கபடி போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் தபாங் டெல்லி , ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின.
இந்த ஆட்டங்களில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 50-33 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இதையடுத்து,பெங்கால் வாரியர்ஸ் மற்றும் தபாங் டெல்லி இடையே நடைபெற்ற ஆட்டத்தில், இரு அணிகளும் சமமான புள்ளிகளைப் பெற 46-46 என்ற புள்ளி கணக்கில் அந்த ஆட்டம் டை ஆனது. இதன் மூலம், டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
மேலும், இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெறவுள்ள புரோ கபடி போட்டியில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதில் குஐராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான் மற்றும் யுபி யுதாஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
‘ஜிகர்தண்டா-2’ இப்படித்தான் இருக்குமாம் – கார்த்திக் சுப்புராஜ் சொன்ன தகவல்..