பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் உழவர்கரை தொகுதியை சேர்ந்த 14 பயனாளிகளுக்கு தவணை தொகையாக ரூ.19 லட்சத்திற்கான ஆணையை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் வழங்கினார்.
பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் சார்பாக தொகுதி வாரியாக வீடு கட்டும் பயனாளிகளுக்கு தவணை தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உழவர்கரை தொகுதிக்குட்பட்ட 14 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தவணைத் தொகை வழங்கும் நிகழ்வு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் கலந்து கொண்டு முதல் தவணை, இரண்டாம் தவணை, மூன்றாம் தவணையாக 14 பயனாளிகளுக்கு 19 லட்சம் ரூபாய்க்கான ஆணையை வழங்கினார். உடன் குடிசைமாற்று வாரிய இளநிலை பெறியாளர் பாஸ்கர் மற்றும் ஊர்முக்கிய பிரமுகர்கள், பயனாளிகள் உடனிருந்தனர்.