கோடைகாலத்தில் மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு அனல் மின் நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் பிற பருவ நிலைகளைக் காட்டிலும், கோடைக் காலத்தில் மின் தேவை அதிகரித்து காணப்படுவது வழக்கம். அந்த வகையில் வரவுள்ள கோடைக்காலத்திலும் மின் தேவை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதனின் ஒரு பகுதியாக, நாட்டில் அனைத்து மின் நிலையங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ‘நாட்டின் கோடைகால மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மார்ச் 16 முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை பயன்படுத்தி தங்கள் முழு உற்பத்தி திறனுடன், மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும்.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டாடா பவர், அதானி மின் நிலையங்கள் உள்ளிட்ட 15 அனல் மின் நிலையங்களுக்கு இந்த சுற்றறிக்கையை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதனால், கோடைக்காலத்தில் மின்சார தட்டுப்பாடு குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘நான் ரெடி’ – ஐபிஎல் குறித்து பிரபல சிஎஸ்கே வீரர் பேட்டி!