Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு'நான் ரெடி' - ஐபிஎல் குறித்து பிரபல சிஎஸ்கே வீரர் பேட்டி!

    ‘நான் ரெடி’ – ஐபிஎல் குறித்து பிரபல சிஎஸ்கே வீரர் பேட்டி!

    சென்னை சூப்பர் கிங்ஸின் பிரபல கிரிக்கெட் வீரர் தீபக் சஹார், ஐபிஎல் போட்டியில் விளையாடத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். 

    இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 16-ஆவது ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற மார்ச் 31-ஆம் தேதி தொடங்கி மே 21-ஆம் தேதி நிறைவடைகிறது.

    இந்நிலையில், ஐபிஎல் குறித்த பேச்சுகள் சமூகவலைதளம் முழுக்க நீண்டுள்ளது. பல வீரர்களும் ஐபிஎல் குறித்து தங்களது கருத்துகளை, எதிர்பார்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 

    அந்தவகையில், சென்னை சூப்பர் கிங்ஸின் பிரபல கிரிக்கெட் வீரர் தீபக் சஹார், ஐபிஎல் போட்டியில் விளையாடத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தவர் தற்போது பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். 

    அதில், கடந்த 2, 3 மாதங்களாக என்னுடைய உடற்தகுதிக்காக மிகவும் பாடுபட்டுள்ளேன். தற்போது முழு உடற்தகுதியை அடைந்து ஐபிஎல் போட்டியில் விளையாடத் தயாராக உள்ளேன். இரு பெரிய காயங்களால் பல மாதங்கள் விளையாடாமல் இருந்தேன். சரியான உடற்தகுதியுடன் நான் விளையாட ஆரம்பித்தால் என்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியிலும் நான் இடம்பெறுவேன் என நம்பிக்கையுடன் உள்ளேன் என்றார்.

    ரீ-ரிலிஸானது வாரிசு; குஷியில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....