Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அரசியல் களத்தில் பரபரப்பு..

    சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அரசியல் களத்தில் பரபரப்பு..

    நேற்று ட்விட்டரில் #GETOUTRAVI என்ற ஹாஷ்டேக் டிரெண்ட் ஆனதை தொடர்ந்து, ஹாஷ்டேக் பதிவிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்து சென்னையின் முக்கிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    2023-ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்கு தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில், ஆளுநரின்  உரை முக்கியமாக பார்க்கப்பட்டது. 

    இந்நிலையில், நேற்று காலை தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர், திராவிட மாடல், தமிழ்நாடு என்ற வார்த்தையை படிக்காமல் அவர் புறக்கணித்தார். இத்துடன், தமிழ்நாடு என்று வார்த்தை இடம்பெற்ற ஒவ்வொரு வாசகத்தையும் ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்தாக கூறப்படுகிறது. 

    இதைத்தொடர்ந்து, ஆளுநரின் உரை குறித்து மு.க.ஸ்டாலின் பேசினார். அதில் அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது தவறு என்று கண்டனம் தெரிவித்தார். மேலும், ஆளுநருக்கு எதிராக தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதனால், தேசிய கீதம் இசைத்து கூட்டம் முடிப்பதற்கு முன்னதாகவே பாதியிலேயே அவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். 

    நேற்று நடைபெற்ற இந்நிகழ்வுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனின் ஒரு பகுதியாக நேற்று ட்விட்டரில் #GETOUTRAVI என்ற ஹாஷ்டேக் தொடர் டிரெண்டிங்கில் இருந்தது.

    இந்நிலையில், இன்று சென்னையின் கிண்டி, ஆழ்வார் பேட்டை போன்ற முக்கிய பகுதிகளில், #GETOUTRAVI என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்ததற்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

    ‘அவர் அநாகரீகமாக நடந்துக் கொண்டார்’ – ஆளுநர் மீது அப்பாவு குற்றச்சாட்டு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....