Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதடை செய்யப்பட்ட போதை பொருளுடன் விமான நிலையத்தில் சிக்கியவர் கைது

    தடை செய்யப்பட்ட போதை பொருளுடன் விமான நிலையத்தில் சிக்கியவர் கைது

    கொல்கத்தாவில் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருளான பான் மசலா பாக்கெட்டுகளுடன் தாய்லாந்து செல்ல முயற்சி செய்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். 

    கொல்கத்தாவில் இருந்து தாய்லாந்து நாட்டு தலைநகரான பாங்காக்கிற்கு தடை செய்யப்பட்ட போதை பொருளான பான்மசாலா கடத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் கொல்கத்தா விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 

    அப்போது சோதனையில் தாய்லாந்து செல்ல இருந்த நபர் ஒருவரின் பைகளில் இருந்து பான் மசாலா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு 32 லட்சம் ரூபாய்க்கும் அதிகமானது. அதவாது அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 4 லட்சம் ஆகும். 

    இதுமட்டுமின்றி, அவரிடம் இருந்து 10 ரூபாய் தாள்கள் அடங்கிய அமெரிக்க டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சம்பவத்தில் அந்த நபர் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    பனைமரம் விழுந்ததில் சாலையில் சென்றவர் பலி – புதுச்சேரியில் பரிதாபம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....