Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வாரிசா? துணிவா? டாஸ் போட்டு முடிவு செய்த திரையரங்கு; வைரலான வீடியோ

    வாரிசா? துணிவா? டாஸ் போட்டு முடிவு செய்த திரையரங்கு; வைரலான வீடியோ

    வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் நாளை வெளியாவதையொட்டி திரையரங்கு ஒன்று டாஸ் முறையில் எந்தப் படம் திரையிடுவது என முடிவு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    விஜய் – அஜித்குமார் இருவரும் தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நட்சத்திரங்கள் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இருவரின் திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகும் நாள் திருவிழாவாக மாறிவிடுகிறது. 

    இவர்கள் இருவரின் திரைப்படமும் வெவ்வேறு நாளில் தனித்தனியாக வெளியாகும் நாளே திருவிழா கோலம் புகும் என்றால், இருவரின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியானால் அது திருவிழாக்களின் திருவிழா தான்.

    அந்த வகையில் தற்போது, விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும், அஜித்குமார் நடிப்பில் துணிவு திரைப்படமும் உருவாகியுள்ளது. இந்த இரு திரைப்படங்களும் வருகிற 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. எந்தப் படம் முதலில் வெளியாகும்? எந்தப் படத்திற்கு அதிக திரையரங்குகள்? போன்ற பல போட்டிகள் இரு தரப்பு ரசிகர்களிடையேவும் நிலவி வருகிறது. 

    ரசிகர்களின் போட்டி ஒரு பக்கம் என்றால், திரையரங்குகளின் நிலைமை இன்னொரு பக்கம். திரையரங்குகள் துணிவு திரைப்படத்தை தேர்ந்தெடுத்தால், விஜய் ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர். வாரிசு திரைப்படத்தை தேர்ந்தெடுத்தால் அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனால், திரையரங்குகளும் இன்னலான நிலைமையில் உள்ளனர். 

    இந்நிலையில், மூன்று திரைகளைக் கொண்ட ஒரு  திரையரங்கில், ஒரு திரை வாரிசு படத்திற்கும், இன்னொரு திரை துணிவு திரைப்படத்திற்கும் ஒதுக்கப்பட்டது. ஆனால், மூன்றாவதாக உள்ள திரை எந்தப் படத்திற்கு என்று அனைவரும் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். 

    இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிய திரையரங்கு உரிமையாளர், மூன்றாவது திரையில் எந்தப் படம் என்பதை டாஸ் போட்டு முடிவெடுத்துள்ளார். அந்த டாஸின் முடிவில் துணிவு திரைப்படம் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது சார்ந்த வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

    சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அரசியல் களத்தில் பரபரப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....