Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகுடியாத்தத்தில் அஞ்சலக ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம்

    குடியாத்தத்தில் அஞ்சலக ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம்

    வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் அஞ்சலக ஊழியர்கள் நேற்று (ஆகஸ்ட் 9) ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இந்திய அஞ்சல் துறை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து குடியாத்தம் கோட்டத்தில் அஞ்சலக ஊழியர்கள் நேற்று (ஆகஸ்ட் 9) ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    குடியாத்தம் அஞ்சல் கூட்டத்திற்கு உட்பட்ட குடியாத்தம் தலைமை தபால் நிலையம், ஆம்பூர், பேரணாம்பட்டு, பரதராமி, மாதனுர் உள்ளிட்ட 20 துணை அஞ்சலகங்கள் மற்றும் 88 கிளை அஞ்சலகங்களில் 98 சதவீத ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    மேலும், குடியாத்தம் தலைமை அஞ்சலக அலுவலகம் முன்பு, வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இதற்கு, சங்க நிர்வாகி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். 

    இந்த வேலை நிறுத்தம் காரணமாக, நேற்று (ஆகஸ்ட் 9) தபால் அலுவகத்துக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....