Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பாவம் ஓபிஎஸ், கலங்கிப் போய் எதையெதையோ பேசுகிறார் - அமைச்சர் துரைமுருகன்

    பாவம் ஓபிஎஸ், கலங்கிப் போய் எதையெதையோ பேசுகிறார் – அமைச்சர் துரைமுருகன்

    ‘பாவம் ஓபிஎஸ், கலங்கிப் போய் எதையெதையோ பேசுகிறார்’ என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

    முன்னதாக, ஆந்திர அரசு அணை கட்ட முயற்சிக்கும் விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இரட்டை வேடம் போடுவதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டினார். 

    இந்நிலையில், இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‘பாவம்.. அவரே கலங்கிப் போய் எதையெதையோ பேசிக் கொண்டிருக்கிறார். அதையெல்லாம் பேச வேண்டாம். வேறு யாராவது சொன்னால் சொல்லுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

    மேலும் அவர், ‘ஆந்திர அரசு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். அணை கட்டுவதற்கு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால், அந்த வழக்கை விரைவுப்படுத்துவோம்’ என்று தெரிவித்தார். 

    திமுக அரசு பயங்கரவாதத்துக்கு துணை போவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் குமார் சௌபே கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய  கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‘விவரம் தெரியாத அமைச்சர் அவர். நாங்கள் எந்தக் காலத்திலும் பயங்கரவாதத்துக்கு துணை போவதில்லை. எங்கள் கொள்கையும் அது இல்லை’ என தெரிவித்தார்.

    இதையும் படிங்க : ‘ஓசி டிக்கெட்’ என பெண்களை அசிங்கப்படுத்திய பொன்முடி- தலைவர்கள் கண்டனம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....