Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்"என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது" பொன்னியின் செல்வன் புரோமோஷனில் சரத்குமார் ஆவேசம்!

    “என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது” பொன்னியின் செல்வன் புரோமோஷனில் சரத்குமார் ஆவேசம்!

    ‘குடி, சிகரெட் பழக்கம் உடல்நலத்தை கெடுக்கும்’ ஆனால் அதெல்லாம் உங்களால் தடை செய்ய முடியுமா என சரத்குமார் பேச்சு. 

    மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியுள்ளது. நாளை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படக்குழு தீவிரமாக புரோமஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 

    இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஒரு பகுதியாக நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அதில் ஒன்றாக ‘ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் தங்களது பணத்தை தொடர்ந்து இழந்து வரும் நிலையில், நீங்கள் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருகிறீர்களே?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

    இதற்கு சரத்குமார் அளித்த பதிலாவது;

    ” ‘குடி, சிகரெட் பழக்கம் உடல்நலத்தை கெடுக்கும்’ ஆனால் அதெல்லாம் உங்களால் தடை செய்ய முடியுமா. அதே மாதிரி எதையெதை தடை செய்யணும்னு நான் முடிவு பண்ண முடியாது. அதை உச்சநீதிமன்றமும், அரசும் மட்டும் தான் பண்ண முடியும். அப்படி அரசாங்கம் தடை செய்த ஒன்றில் நான் நடிக்க மாட்டேன். ஆனால் அரசாங்கம் தடை செய்யாத ஒன்றில் நடித்தால் யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது. முதலில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுங்கள். 

     அதுபோல, டாஸ்மாக் கடைகளால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அதை மூட வேண்டும் என்று சொல்லுங்கள், உங்களுக்கு  ஆதரவாக நான் போராட தயாராக இருக்கிறேன் . சினிமாவில் ‘சிகரெட் பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு’  என்று கீழேயே விழிப்புணர்வு வாசகம் வருகிறது. அதனால எல்லாரும் சிகரெட் பிடிக்கிறதை நிறுத்திட்டீங்களா என்ன, இல்லையே. குடிப்பழக்கத்தால் தினமும் இரவு நேரத்தில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. அப்போ அதை முழுமையாக ஒழித்து விட வேண்டியதுதானே. ஏன் பண்ண முடியல. இது ரொம்ப பெரிய விவாதம், இன்னொரு நாள் நல்லா விரிவா இத பேசுவோம்”

    என்று அவர் பதிலளித்தார். 

    இதையும் படிங்க:பாவம் ஓபிஎஸ், கலங்கிப் போய் எதையெதையோ பேசுகிறார் – அமைச்சர் துரைமுருகன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....