Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இப்படித்தான் பொன்னியின் செல்வனின் பாடல் உருவானதா?

    இப்படித்தான் பொன்னியின் செல்வனின் பாடல் உருவானதா?

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ராட்சச மாமனே பாடலின் உருவாக்க வீடியோ வெளிவந்துள்ளது. 

    மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் பொன்னியின் செல்வம் திரைப்படம் உருவாகியுள்ளது. 

    இரு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இரு பாகங்களில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இதையும் படிங்க: அரசியலுக்கு மொத்தமாக கும்பிடு போட்ட நெப்போலியன் – காரணம் என்ன தெரியுமா?

    இதனை அடுத்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதைமாந்தர்களை அவ்வபோது போஸ்டராக இணையதளத்தில் படக்குழு வெளியிட்டு வந்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றன.

    மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோ ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, பொன்னி நதி, சோழா சோழா, ராட்சச மாமனே, சொல் போன்ற பாடல்களின் லிரிக் வீடியோ வெளிவந்துள்ளது. 

    இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராட்சச மாமனே’ படாலின் உருவாக்க காணொலி வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

    கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படமே பொன்னியின் செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது. 

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....