இனி நான் அரசியலுக்கே வரமாட்டேன் என்று நெப்போலியன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகர் நெப்போலியன் நடிப்பில் மட்டுமல்லாது, அரசியலிலும் தன்னை நிரூபித்தார். இவர் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: மனுவை வாங்கிவிட்டு ‘பிக் பாஸ்’ போய்விடுவாரு – கமலை கடுமையாக விமர்சித்த வானதி சீனிவாசன்
அப்போது பேசிய அவர், குழந்தையின் உடல் நலக்குறைவால் சினிமா தொழிலில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை என தெரிவித்தார் . இதனால் அரசியலில் இருந்து விலகி ஏழு ஆண்டுகள் கழிந்து விட்டதாக கூறினார். மேலும், இனி நான் அரசியலுக்கே வரமாட்டேன் என்றும் நெப்போலியன் தெரிவித்தார்.
மேலும், நெப்போலியன் கூறியதாவது:
தான் விவசாய குடும்பத்தை சார்ந்துள்ளதால் அடிப்படையில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அதற்காக கடந்த ஆண்டு 300 ஏக்கரில் நிலம் வாங்கி விவசாயம் செய்துள்ளளேன். கடந்த நான்கு மாதங்களில் காய்கறிகள் அனைத்தும் நிலத்திலிருந்து நானே பறித்து உபயோகப்படுத்தினேன். தான் சாகும்வரை, அரசியலுக்கு குரு கருணாநிதியும், சினிமாவுக்கு குரு பாரதிராஜாதான். இதில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறாக அவர் கூறினார்.