Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பொன்னியின் செல்வன் வெற்றியால், மீண்டும் துவங்கும் 'சங்கமித்ரா'; முனைப்புடன் சுந்தர்.சி

    பொன்னியின் செல்வன் வெற்றியால், மீண்டும் துவங்கும் ‘சங்கமித்ரா’; முனைப்புடன் சுந்தர்.சி

    ஜெயம் ரவி, ஆர்யா நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த சங்கமித்ரா திரைப்படத்தை தற்போது லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    ஜெயம் ரவி, ஆர்யா நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த திரைப்படம் தான் சங்கமித்ரா. 

    இந்தத் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தயாரிக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 

    இந்த சங்கமித்ரா திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், இந்தத் திரைப்படம் கால தாமதமாகி வந்ததால் அவர் இந்தத் திரைப்படத்தில் இருந்து விலகினார். 

    இதனிடையே, ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு வெளியானது விஜய் சேதுபதியின் “இடம் பொருல் ஏவல்” பட டிரெய்லர்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....