வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் பொங்கல் ரிலீஸ் குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் – அஜித்குமார் இருவரும் தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நட்சத்திரங்கள் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இருவரின் திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகும் நாள் திருவிழாவாக மாறிவிடுகிறது.
இவர்கள் இருவரின் திரைப்படமும் வெவ்வேறு நாளில் தனித்தனியாக வெளியாகும் நாளே திருவிழா கோலம் புகும் என்றால், இருவரின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியானால் அது திருவிழாக்களின் திருவிழா.
தற்போது, வாரிசு என்ற திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க, தில் ராஜூ தயாரிக்கிறார். அதேபோல, அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது.
இதையும் படிங்க:செல்வராகவன் – மோகன்.ஜி கூட்டணியில் உருவாகிவரும் ‘பகாசூரன்’ திரைப்படத்தின் புகைப்படங்கள்!
இந்த இரு திரைப்படங்களும் 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் பொங்கல் வெளியீடு என்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல துணிவு திரைப்படமும் பொங்கல் வெளியீடு என்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் இரு முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியீடு தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார். ‘விஜய் – அஜித் படங்களான ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ பொங்கலுக்கு வெளிவருகிறது என்பது உறுதியான தகவல்தான். இரண்டுமே பெரிய படங்கள் என்பதால் இரண்டிற்கும் சமமான தியேட்டர்கள் நிச்சயம் கிடைக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
இருவரின் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியானால், 11-வது முறை இருவரின் திரைப்படமும் நேருக்கு நேர் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கோயமுத்தூர் மாப்பிள்ளை மற்றும் வான்மதி 1996 ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், பூவே உனக்காக மற்றும் கல்லூரி வாசல் 1996-ம் ஆண்டு இரண்டாவது முறையாகப் பிப்ரவரி மாதமும், காதலுக்கு மரியாதை மற்றும் ரெட்டை ஜடை வயசு 1997-ம் ஆண்டும், துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் உன்னைத் தேடி 1999-ம் ஆண்டும், குஷி மற்றும் உன்னைக் கொடு என்னைத் தருவேன் 2000-ம் ஆண்டும், ஃபிரண்ட்ஸ் மற்றும் தீனா 2001-ம் ஆண்டும், பகவதி மற்றும் வில்லன் 2002-ம் ஆண்டும், திருமலை மற்றும் ஆஞ்சநேயா 2003-ம் ஆண்டும், ஆதி மற்றும் பரமசிவன் 2006-ம் ஆண்டும், இறுதியாக 10வது முறை ஜில்லா மற்றும் வீரம் 2014-ம் ஆண்டும் வெளியாகியது.
இதையும் படிங்க:செல்வராகவன் – மோகன்.ஜி கூட்டணியில் உருவாகிவரும் ‘பகாசூரன்’ திரைப்படத்தின் புகைப்படங்கள்!