தி.மு.க எம்.பி மீண்டும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது வெறுப்புணர்வை வீசியிருக்கிறார் என அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா. இவர் அண்மையில் நாமக்கலில் நடந்த விழாவில் கலந்துக்கொண்டார். அப்போது, “ ‘நீ கிறித்தவனாக இல்லையென்றால், நீ இஸ்லாமியனாக இல்லையென்றால், நீ பாரசீகனாக இல்லையென்றால், நீ இந்துவாகத்தான் இருக்கவேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது” எனக் குறிப்பிட்டு மேலும் சில கருத்துகளைத் ஆ.ராசா தெரிவித்திருந்தார்.
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து தனது ட்விட்டர் பதில் விமர்சனம் செய்துள்ளார்.
அதில் அவர், “மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு, தி.மு.க எம்.பி மீண்டும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது வெறுப்புணர்வை வீசியிருக்கிறார். தமிழ்நாடு தங்களுக்குத்தான் சொந்தம் என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிஷ்டவசமானது” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு-அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதில்