Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'விடையும், வரவேற்பும்' - பாட்டாளி மக்கள் கட்சியின் தீர்மானங்கள்...

    ‘விடையும், வரவேற்பும்’ – பாட்டாளி மக்கள் கட்சியின் தீர்மானங்கள்…

    பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 2022-க்கு விடை கொடுப்போம், 2023-ஐ வரவேற்போம் என்ற புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி அடுத்த சங்கமித்ரா அரங்கத்தில் இன்று நடைபெற்றது. 

    இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி, கௌரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் நூற்றுக்கணக்கான பாமகவினர் கலந்துகொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பாமக பொதுக்குழு கூட்டம் தீர்மானம்:

    1. 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள தயார். 40 மக்களவை தொகுதிகளிலும் களப்பணிகளை விரைவுபடுத்துவோம். தேர்தலில் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
    2. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மத்தியிலும், மாநிலத்திலும் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    3. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 % உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
    4. வாழ்வை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் தாமதிக்காமல் ஒப்புதல் அளித்து நிறைவேற்ற வேண்டும். 
    5. நிலக்கரி சுரங்கத்திற்காக 25,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியை என்.எல்.சி. நிறுவனம் மற்றும் தமிழக அரசு கைவிட வேண்டும்.
    6. தமிழகத்தில் தனியார் வேலைவாயப்புகளில் 80% தமிழர்களுக்கே வேலையை உறுதி செய்ய வேண்டும்.
    7. அரசு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    8. சோழர் பாசன திட்டம், தர்மபுரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
    9. மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது.
    10. பருவமழையால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும்.
    11. கஞ்சா, குட்கா உள்ளிட்ட நடமாட்டத்தை ஒழிக்க வேண்டும்.
    12. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். போதைப்பொருட்களை தடை செய்ய வேண்டும்.
    13. தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    14. அரசு பள்ளிகளில் ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர்த் என்பதை உறுதி செய்யவேண்டும்.
    15. நீட் தேர்வில் இருந்த தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெற நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
    16. சிங்கள படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், கைது செய்யப்படுவதற்கும் நிரந்தர தீர்வு காண வேண்டும். 
    17. புதுச்சேரியில் “பி” பிரிவு பணிகளில் 18% இடஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.
    18. புதுவையில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.
    19. 2023-ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்சி சாராத இளைஞர்களை  சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும்.
    20. சென்னையில் எஞ்சியுள்ள மழைநீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

    விபத்துக்குள்ளான ரிஷப் பந்த்; உதவ முன்வந்த மாநில அரசு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....