மராட்டிய மாநிலத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை பன்றி மிக கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம், கொண்டா மாவட்டத்தில் 3 சிறுவர்கள் தங்களது வீட்டுக்கு வெளியே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த பன்றி ஒன்று விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவனை கொடூரமாக தாக்கியது. பன்றியால் தாக்கப்பட்ட சிறுவன் அலறி கூச்சலிட்டான்.
இதையடுத்து சிறுவனின் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் பன்றியை விரட்டி சிறுவனை மீட்டனர். பன்றி தாக்கியதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். மேலும், சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனை பன்றி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில், தற்போது அந்தக் காணொளி சமூக வலைகதளங்களில் வைரலாகி வருகிறது.
महाराष्ट्र के गोंदिया जिले में सुअर ने किया बच्चे पर हमला.
सुअर के बच्चे पर हमले की तस्वीरें सीसीटीवी कैमरे में कैद..
इस हमले में बच्चा गंभीर रूप से घायल, इलाज जारी.#Maharashtra pic.twitter.com/tL1NpdZu18
— Vivek Gupta (@imvivekgupta) March 14, 2023
லோகேஷ் கனகராஜூக்கு சஞ்சய் தத் சொன்ன வாழ்த்து; வைரலான ட்விட்