Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமழைக்கால கூட்டத்தொடர்: ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் இடைநீக்கம்

    மழைக்கால கூட்டத்தொடர்: ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் இடைநீக்கம்

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஒரு வாரத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

    நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதியில் தொடங்கியது. இக்கூட்டமானது ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. 

    இந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜிஎஸ்டி வரி உயர்வு, விலை உயர்வு, பணவீக்கம், வேலையின்மை போன்றவை குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முன்னதாக கடந்த திங்கள்கிழமை (ஜூலை 25) அன்று தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  நான்கு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களை, மீதமுள்ள மழைக்கால கூட்டத்தொடர் முழுவதிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து, நேற்று (ஜூலை 26)  கனிமொழி உள்பட திமுக கட்சியில் இருந்து 6 பேர், திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த 7 பேர், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியை சேர்ந்த 3 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 2 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 19 பேர் இந்த வாரம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் 8வது நாளான இன்றும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி தொடர்ந்ததால், மாநிலங்களவை மதியம் 12 மணி வரையும், மக்களவை மதியம் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

    இன்று மாநிலங்களவை தொடங்கியபோது, அவையின் துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெளியிட்ட அறிவிப்பில், அவை நடவடிக்கையில் இடையூறு ஏற்படுத்தியதற்காக ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், இந்த வாரத்தின் மீதமுள்ள நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்.

    இன்று (ஜூலை 27) மதியம் மாநிலங்களவை துவங்கியபோது, சஞ்சய் சிங்கை இடைநீக்கம் செய்ததற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை இன்று (ஜூலை 27) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும், 24 நாடாளுமன்ற உறுப்பினர்களின் (20 மாநிலங்களவை உறுப்பினர்கள், 4 மக்களவை உறுப்பினர்கள்) இடைநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அடுத்த 50 மணி நேரங்கள் இரவு பகல் பாராமல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

    மழைக்கால கூட்டத்தொடர்: 19 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....