தமிழக அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தை பற்றிய முழு விவரம்:
- தமிழகத்தில் உள்ள 1,545 தொடக்க பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.
- இதில் 1,14,095 மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள். இந்த திட்டத்துக்காக ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சென்னை மாநகராட்சி பொறுத்தவரையில், 36 பள்ளிகளில் 5941 மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழக்கங்கப்பட உள்ளது.
- 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.
- 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.
- 11 வட்டாரங்களில் 728 பள்ளிகளில் 42,826 மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
- 6 மலைப்பகுதிகளில் 237 பள்ளிகளில் 10,161 மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.
காலை சிற்றுண்டி பட்டியல்:
- திங்கள்கிழமை– அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்.
- செய்வாய்க்கிழமை– ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி.
- புதன்கிழமை– வெண் பொங்கல், ரவா பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார்.
- வியாழக்கிழமை– அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்.
- வெள்ளிக்கிழமை– ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, ரவா கேசரி, சேமியா கேசரி.
வாரத்தில் குறைந்தது 2 நாள்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
காலை சிற்றுண்டி திட்டத்துக்கான குறிக்கோள்கள்:
- மாணவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல்.
- மாணவர்களுக்கு ஊட்டச்சத்தை உயர்த்துதல்.
- மாணவர்களின் வருகையை அதிகரித்தல்.
- வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல்.
காலை சிற்றுண்டி திட்டத்துக்கான வழிமுறைகள்:
- உணவு தயாரிக்க பயன்படுத்தும் பொருள்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் (FSSAI) நெறிமுறைகளின்படி இருத்தல் வேண்டும்.
- உணவு தயாரிப்பதில் வேறு வெளி மூலப் பொருள்கள் சேர்க்க கூடாது.
- உள்ளூர் உள்ள சமையல் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.
- காய்கறிகளின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.
- உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடிக்கடி பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும்.
- பள்ளி மேலாண்மை குழு தினசரி உணவை ருசி பார்க்க வேண்டும்.
திட்டத்தின் கண்காணிப்பு பணி:
காலை சிற்றுண்டி திட்டத்தை கண்காணிக்க சமூக நலன், ஊரக வளர்ச்சி, நகர்ப்புறம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக் கல்விதுறை, ஒருங்கிணைத்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், உணவு பாதுகாப்பு துறை ஆகிய அதிகாரிகளால் அடங்கிய குழு மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவில் அமைக்கப்பட உள்ளது.
ஊழல் புகார்: போக்குவரத்து துணை ஆணையர் பணியிடை நீக்கம்