ஊழல் புகாரில் சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை துணை போக்குவரத்து ஆணையரகத்தில், ஆணையராக பணியாற்றி வருபவர் நடராஜன். இவர் தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர்களிடம் பதவி உயர்வுக்காக லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, துணை போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.35 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து போக்குவரத்து துறையின் துணை ஆணையர் நடராஜன், நெல்லைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இனி போக்குவரத்து சிக்னலின்போது உங்கள் காதுகளில் இசை பாயும்