Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புபாதுகாப்பு படையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள்- வெளிவந்த அறிவிப்பு

    பாதுகாப்பு படையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள்- வெளிவந்த அறிவிப்பு

    இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

    இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள செவிலியர் (nurse) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  காலியாக உள்ள 18 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது.  

    இந்த பணியிடங்களுக்கான மாத சம்பளம் ரூ.35,400 – 1,12,400 இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  வயதுவரம்பு 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு விண்ணப்பிக்க, பிளஸ் 2 தேர்ச்சியுடன் General Nursing & Midwifery பிரிவில் டிப்ளமோ முடித்து மத்திய, மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ITBP ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, முழு மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், பொது, ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.200 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க செப்டம்பர் 15 கடைசி தேதி ஆகும். 

    மேலும், விவரங்களுக்கு கீழ்காணும் இணையதளப் பக்கத்தை அனுகவும் – www.recruitment.itbpolice.nic.in/DOTCOM/Downloads/192.pdf 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....