Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்நுபுர் ஷர்மாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு!

    நுபுர் ஷர்மாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு!

    காவல்துறை நுபுர் ஷர்மாவை குற்றவாளாக கருதவேண்டுமென கவன ஈர்ப்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  

    பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் இவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. மேலும் பல்வேறு புகார்கள் இவர் மீது கொடுக்கப்பட்டது. இதன்காரணமாக, பாஜக இவரை கட்சியிலிருந்து நீக்கியது. 

    நபிகள் நாயகம் குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தில்லிக்கு மாற்றக்கோரி நுபுர் ஷர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, நுபுர் ஷர்மாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. 

    இந்நிலையில், அவதூறான கருத்து தெரிவித்தது தொடர்பாக விசாரனைக்கு நேரில் வருமாறு கடந்த மாதம் வெவ்வேறு தேதிகளில் நுபுர் ஷர்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து, கொல்கத்தா காவல் துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஒரு நபருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், அந்த நபர் வெளிநாடுகளுக்கு செல்வது தடுக்கப்படும். 

    நுபுர் ஷர்மாக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....