மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகள் என்ற சுயமரியாதை பெயரைச் சூட்டியவர் கலைஞர் தான். ஒரு திறன் குறைந்தாலும் இன்னொரு திறன் மூலம் ஆற்றல் மிகுந்தவர்கள் நீங்கள்(மாற்றுத்திறனாளிகள்).
உலக வங்கி உதவியுடன் மாற்றுத்திறனாளிகள் உதவித்திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பி.காம்., பி.சி.ஏ. படிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இப்போது கொரோனா காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆவின் பாலகம் அமைக்க வாடகை, முன்பணம் செலுத்துவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதையும் படிங்க : துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசன்.. திமுகவில் பரபரப்பு!
சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 4 முதல்வர்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். வெறும் 4 முதல்வர்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே…
திமுக ஆட்சியின் மீது அவதூறு கருத்துகளைப் பரப்ப நினைக்கிறார்கள். சொல் புத்தியும் இல்லாமல், சுயபுத்தியும் இல்லாமல் செயல்பட்ட அதிமுக ஆட்சி போல் திமுக ஆட்சி இல்லை. இனி தமிழகத்தை ஆளப்போவது திமுக ஆட்சிதான். மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களின் நம்பிக்கையை ஆட்சியர்கள் பெறுவதுதான் சாதனை.
மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்குவதற்கான வயது உச்சவரம்பு 60-ஆக அதிகரித்துள்ளது. மேலும், தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் 235 இல்லங்களுக்கு வழங்கப்படும் உணவூட்டு மானியம் அதிகரித்துள்ளது. உணவூட்டு மானியம் ரூ. 900-ல் இருந்து ரூ. 1200 -ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
#LIVE:தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் & பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநாட்டில் சிறப்புரை https://t.co/2wLxdSaKq6
— M.K.Stalin (@mkstalin) September 19, 2022