பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் .
சென்னையில் தொழில்நுட்ப கல்வி இயக்குநகரத்தில் இன்று கலந்தாய்வு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க:தொடங்கவுள்ள கடைசி ஒருநாள் போட்டி…தொடரைக் கைப்பற்றுமா இந்திய அணி?
அதேபோல் ஒவ்வொரு கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்து வந்த நிலையில் ,தற்போது இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில், காலியிடங்கள் இருக்க வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்தார் .
மேலும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 13ம் தேதி துவங்க உள்ளதாகவும் ,கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், ஐடி பிரிவுகளில் மாணவர்கள் அதிகம் சேர்வதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் அமைச்சர் பொன்முடி கூறினார் .