Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅதிகரிக்கும் கொரோனா தொற்று; ஒரே நாளில் 35 பேர் பலி

    அதிகரிக்கும் கொரோனா தொற்று; ஒரே நாளில் 35 பேர் பலி

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,930 ஆக அதிகரித்துள்ளது. 

    இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 16,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக 18,930 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,35,53,653 ஆக அதிகரித்துள்ளது. 

    இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,19,457 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,25,305 ஆக அதிகரித்துள்ளது. 

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 14,650 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,29,21,977 ஆக அதிகரித்துள்ளது. 

    கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 11, 44,498 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,98,33,18,772 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

    இந்தியாவில் பரவும் புதிய வகை வைரஸ் – உலக சுகாதார மையம் தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....