Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஜூலை 20-ம் தேதி இலங்கையில் புதிய அதிபருக்கான தேர்தல்!

    ஜூலை 20-ம் தேதி இலங்கையில் புதிய அதிபருக்கான தேர்தல்!

    இலங்கையில் ஜூலை 20-ம் தேதி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கே மாபெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இலங்கை மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

    கடந்த சனிக்கிழமை, அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். 

    இதையடுத்து, நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. 

    இதன்படி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர்.

    இந்நிலையில், இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளதாக, இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த அபேவர்தனே தெரிவித்தார். மேலும், இலங்கை நாடாளுமன்றத்தில் வருகிற ஜூலை 20-ம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம்- கோத்தபய ராஜபக்சே

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....