Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம்- கோத்தபய ராஜபக்சே

    இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம்- கோத்தபய ராஜபக்சே

    இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை நியமித்து கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். 

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், இலங்கை மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். 

    இதையடுத்து இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியையும், ரணில் விக்ரமசிங்கே தனது பிரதமர் பதவியையும் ராஜிநாமா செய்வதாக தெரிவித்தனர்.

    இந்நிலையில், இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளதாக, இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த அபேவர்தனே தெரிவித்துள்ளார். 

    கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்யாமல் இடைக்கால அதிபரை நியமனம் செய்துள்ளார். இது இலங்கை அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டுத் தப்பிச்சென்றதாக கூறப்படும் நிலையில், அவருக்கு ரணில் விக்ரமசிங்கே உதவியதாக மக்கள் குற்றம்சாட்டியும், அவரின் அலுவலகம் முன்பு போராடியும் வருகின்றனர். 

    இந்நிலையில். இன்று இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இலங்கையில் இருந்து தப்பிக்க இந்தியாவிடம் உதவி கோரினாரா கோத்தபய ராஜபக்சே?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....