Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு.. திடுக்கிட வைக்கும் புதிய ஆதாரம்!

    கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு.. திடுக்கிட வைக்கும் புதிய ஆதாரம்!

    கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த ஜூலை 13-ம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்ததாக ஆதாரம் கிடைத்துள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த ஜூலை 13-ம் தேதி பள்ளி விடுதி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.  

    கடந்த ஜூலை 17-ம் தேதி காலை மாணவி ஸ்ரீமதி உயிரிழப்புக்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர், சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு இப்போராட்டம், பெரும் வன்முறையாக மாறியது.இதைத் தொடர்ந்து, இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது. மாணவி உயிரிழந்த ஜூலை 13ம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்ததாக ஆதாரம் கிடைத்துள்ளது. பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என மாணவியின் தாய் ஏற்கனவே குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில் தற்போது இந்த ஆதாரம் வெளியாகி இருக்கிறது .

    இனி தெரு நாய்களுக்கு சோறு வைத்தால் ‘உங்க கதி அதோகதிதான்’! – சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....